தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட முகாம் சார்பில் இரத்ததான முகாம்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை கல்லூரியின் என்எஸ்எஸ் திட்ட முகாம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி‌. முத்து தலைமை தாங்கினார். தெள்ளாறு…

கும்பகோணத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சிவசேனா கட்சி சார்பில் நினைவஞ்சலி

கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் புல்வாமாதாக்குதலில் உயிரிழந்தராணுவ வீரர்களுக்குசிவசேனா கட்சிசார்பில் நினைவஞ்சலி….. மகாராஷ்டிரா துணை முதல்வர் திரு ஏக் நாத் சிண்டே .ஜி கீழ் இயங்கும் சிவ சேனா கட்சி தமிழகம் சார்பாக கோயம்புத்தூரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் திட்டமிட்டு வெடிகுண்டு தாக்குதலால்…

செங்கோட்டை எஸ் ஆர் எம் அரசு பள்ளி மாணவிகள் நடத்திய போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவுன்படி எஸ் ஆர் எம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் செங்கோட்டை காவல்துறையினர் குற்றாலம் ரோட்டரி கிளப் சாதனா இணைந்து போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சுமார் 350…

எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மண்டல செயலாளராக ஈரோடு ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் அவர்கள் தேர்வு!

எஸ்டிபிஐ கட்சியின் மாநில நிர்வாக பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கட்சியின் கோவை மண்டல தலைவராக மேட்டுப்பாளையம் M.E.அப்துல் ஹக்கீம் மற்றும் மண்டல செயலாளராக ஈரோடு ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் ஆகியோர் மாநில நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின்…

100 நாள் வேலை கேட்டுவட்டார வளர்ச்சி அலுவலர்அறை முற்றுகை

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நூறுநாள் வேலை வாய்ப்பு முறையாக வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் நூறுநாள் வேலை வாய்ப்பு முறையாக வழங்க வலியுறுத்திமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்டக்குழுவின் சார்பில்…

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் 100 வது ஆண்டு விளையாட்டு தொடக்க விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சிறப்பாக செயல்பட்டு வரும் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியின் 100 வது ஆண்டு விளையாட்டுப் போட்டி விழா நடைபெற்றது. முன்னதாக சீர்காழி காவல் நிலைய முகப்பு பகுதியில் இருந்து ஒலிம்பிக்…

சங்கரன்கோவிலில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகத்தை கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நெசவாலையில் பணிபுரிந்த போது அங்கு வந்த காவல்துறையினர் அத்து மீதி எந்தவித காரணமும்…

திமுக 200 சீட்டிற்கு மேல் பெற்று ஆட்சியில் அமரும்- அமைச்சர் ஐ. பெரியசாமி தேனியில் சூளுரை

தேனி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சுமார் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கால்பந்து மற்றும் கிரிக்கெட் மைதானத்தை ஊரக மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி துவக்கி வைத்து பேசுகையில் துணை…

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் அதிமுகவுக்கு வாழ்வு-இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு தான்-முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது “பஞ்சமி நிலத்தை நான் வாங்கியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.…

பாபநாசத்தில் ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால சீதா,ராதா திருக்கல்யாண உற்சவம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால சீதா,ராதா ஆகியோருக்கு திருக்கல்யாண உற்சவம்… திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீ…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தாசில்தார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான மானிய நிலங்கள் அதிகாரிகள் துணையுடன் பிளாட்…

செண்டு மல்லி பூவின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. செண்டு மல்லி பூவின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை விலை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை……. நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் பூ விவசாயி ராஜ்குமார் 55 இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கணபதிபாளையம்…

மயிலாடுதுறையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும் இ.எஸ்.ஐ, மற்றும் பி எஃப் தொகையை வழங்க வலியுறுத்தி போராட்டம். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட…

பெரம்பலூரில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சட்டநகல் எரித்து போராட்டம்

பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் SDPI கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.கட்சிடின் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சையது அபுதாஹிர் ,மாவட்ட அமைப்பு பொதுச்…

மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பம்பை உடுக்க வாத்தியம் முழுங்க 25 ஆம் ஆண்டு பாதயாத்திரை தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ஆண்டுதோறும்…

கந்தர்வக்கோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் உலக வானொலி தினம் கடைபிடிப்பு

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் உலக வானொலி தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு…

பெரம்பலூரில் CITU பெரம்பலூர் மாவட்டக்குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் :

அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு சட்ட விரோதமாக இந்தியர்களை வெளியேற்றி, மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்தியர்களை பாதுகாக்கவும் மனித உரிமையை மீறுவதாகவும் அமெரிக்க அரசையும்,இந்திய ஒன்றிய அரசை கண்டித்தும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் (பிப்-13) CITU பெரம்பலூர் மாவட்டக்குழு…

மீனாட்சி அம்மன் கோயிலில்மாசி மண்டல உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவ கொடியேற்று விழா மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்றது. அன்று இரவு முதல் விநாயகர், சுப்பிரமணியர், முதல் மூவர் சந்திரசேகரர்…

திமுக ஆட்சி தடுமாறிக் கொண்டு இருக்கிறது-ஆர்.காமராஜ்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர். ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தஞ்சை புதுக்கோட்டை சாலை ஆர்.ஆர்.நகர் அருகே தஞ்சை மத்திய மாவட்ட அதிமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித நீராடினர்:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற…

சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கோவில்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம்

சபாநாயகர் அமைச்சருக்கு எதிராக கோவில்பட்டியில் கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம் கோவில்பட்டி மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வரும் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதாஜீவனை கண்டித்து தமிழ் பேரரசு கட்சியினர் , 5வது…

மதுரையில் இடிக்கப்பட்ட தோரண வாயில் விழுந்து ஜே. சி. பி. டிரைவர் பலி

மதுரை, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே, போக்கு வரத்திற்கு இடையூறாக இருந்த தோரண வாயில் நேற்றிரவு இடிக்கப்பட்டது. அப்போது கட்டிட இடிபாடுகள் ஜே. சி. பி. இயந்தி ரம் மீது விழுந்ததில், அதன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அந்த சாலையில்…

பழனியில் வருகின்ற 16ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வருகின்ற 16 ஆம் தேதி மாலை 4 மணிக்குபழனி பாபா அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டிநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக மாவட்ட பொறுப்பாளர் சைமன் ஜஸ்டின் மண்டல செயலாளர்…

மதுரையில் சலவை தொழிலாளர் பேரவை சார்பில் வெள்ளாவி பொங்கல் விழா

மதுரை மதுரை பீ.பீ.குளத்தில் சலவை தொழிலாளர் பேரவை சார்பாக வெள்ளாவி பொங்கல் விழா நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஊர்வலமாக சென்று அய்யனார் கோவிலில் சிறப்பு தீபாராதனை செய்து சுவாமியை வழிபட்டனர். மேலும் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரசாதமாக சர்க்கரைப்…

தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி!.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி!.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கடும் பனி மூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். காலை 10- மணிவரை வாகனங்களில் முகப்பு…

சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையத்திலிருந்து சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் 12ம் தேதி முதல் வரும் 25ம் தேதி வரை காலை 8 மணி முதல்…

தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாாக் பாா் மூடல் 28ம் தேதி முழுமையாக ஓப்படைக்கும் போராட்டம் நடைபெறும்

தூத்துக்குடி தமிழ்நாடு டாஸ்மாா்க் பாா் உாிமையாளர்கள் பார் கட்டிட உாிமையாளர்கள் தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் அன்பரசன் செயலாளர், பாலமுருகன், பொருளாளர் ராமநாதன், ஆகியோர் கலால் பிாிவு உதவி ஆணையாிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது 2004ம் ஆண்டு முதல் டாஸ்மாக்…

கருவேல் நாயக்கன்பட்டியில் பாஜக கட்சி அலுவலகத்தில் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம்

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கருவேல் நாயக்கன்பட்டியில் உள்ள பாஜக மாவட்ட கட்சி அலுவலகத்தில் புதிய மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் பாஜக மாநில தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ள பி. ராஜ பாண்டியனுக்கு மாவட்ட பாஜக நகர தலைவர்கள் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள்…

பாபநாசம் அருகே தெருவிளக்கு வசதி இல்லாமல் இருட்டு சாலையில் பயத்துடன் வாழும் கிராம மக்கள்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே தெருவிளக்கு வசதி இல்லாமல் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருட்டு சாலையில் பயத்துடன் வாழும் கிராம மக்களின் ஓர் செய்தி தொகுப்பு….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா களஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட விழுதியூர் ,குருவாலபபாடி,கருப்பூர் கிராமங்களில்…

தர்ஹாவில் பன்றியை வெட்டினால் ஏற்றுக்கொள்வார்களா?பேசிய ஜாண் பாண்டியன் – காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது . மதுரை : திருப்பரங்குன்றத்தில் சமீப காலமாக நடைபெற்று வரும் பிரச்சனைகள் சம்பந்தமாக பிப்ரவரி 6 தேதி அன்று ஜாண் பாண்டியன் நியூஸ் 360 சேனலுக்கு…

முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் பாராட்டு விழா

மதுரை “மனித உரிமை போராளி” விருது பெற்ற தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநிலத் தலைவர் முனைவர் பிச்சைவேலு அவர்களுக்கும், “மதிப்புறு முனைவர் பட்டம்” பெற்ற அமைப்பின் மாநில பார்வையாளரும், முன்னாள் எல்லை பாதுகாப்பு படை…

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் வாசலில் உள்ள ஆதிஷேச தீர்த்த திருக்குளத்தில்ஆண்டுதோறும், தைப்பூசத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம் . இருமாதங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக குளத்தில்…

காதணி விழா- சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் நேரில் வாழ்த்து

செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் அடுத்த வேலாமூர் சட்ட உரிமைகள் கழகம் பகுதியில் இன்டர்நேஷனல் அமைப்பின்PRO drTG மனோகர் அவர்களின் வாழ்த்துக்களுடன் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின்DrAசுரேஷ்குமார் சர்வதேச பொதுச்செயலாளர் அவர்கள் இராமாபுரம். செந்தில்குமார் சத்தியவாணி – இல்ல காதணி விழாவில்…

ஜாமீனில் வந்த அண்ணன்-தம்பியை கார் ஏற்றி கொல்ல முயற்சி செய்த ஐந்து பேர் தாராபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே பரபரப்பு.சம்பவம் ஜாமீனில் வந்த அண்ணன்-தம்பியை கார் ஏற்றி கொல்ல முயற்சி செய்த ஐந்து பேர் தாராபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு சரணடைந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம், அருகே கடந்த ஐந்து நாட்களுக்கு…

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி! நாளை 15-வது நாளாக தொடரும் உயர்மின் எதிர்ப்பு இயக்க போராட்டம்!… திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில்…

கண்டமங்கலம் பகுதியில் ரயில்வே கேட்டை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

கண்டமங்கலம் கண்டமங்கலம் பகுதியில் விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழி சாலைக்காக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கேட் அருகாமிலேயே இரு பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சர்வீஸ் சாலை வழியாக…

சந்திரபாடி கிராமத்தில் மீன் இறங்குதளம் மேம்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்காமல் அநீதி இழைத்தபோதும் , தமிழக முதலமைச்சர் மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்; பாஜகவே தமிழகத்தின் திமுக தேர்தல் அறிக்கையை பின்பற்றுகிறது:-மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவ கிராமத்தில்…

மகளிர் இலவச பேருந்து சேவை கோரி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மகளிர் இலவச பேருந்து சேவை கோரி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு:- மயிலாடுதுறையில் இருந்து சேந்தங்குடி, நாகங்குடி, திருநன்றியூர், ஆத்துக்குடி, கதிராமங்கலம், வைத்தீஸ்வரன் கோயில், குன்றத்தூர், பாகசாலை வழியாக தேத்தாக்குடி செல்லும் மார்க்கத்தில்…

வானவில் மன்றத்தின் சார்பில் சார்லஸ் டார்வின் பிறந்த தின கருத்தரங்கம்

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் சார்லஸ் டார்வின் பிறந்த தின கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமையாசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி சத்துணவு சமையலருக்கு பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் பணியாற்றிவரும் சமையலருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பியிடம் வாழ்த்து பெற்ற சந்திரகுமார் எம்எல்ஏ

விழுப்புரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட வி.சி.சந்திரகுமார் நேரில் சந்தித்து தந்தை பெரியார் சிலையை வழங்கி வாழ்த்து பெற்றார்.…

தூத்துக்குடியில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய துவக்கம்

தூத்துக்குடியில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய துவக்கம்.. 2024 பிப்ரவரி 21 அன்று குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்கும் மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து இந்தியாவின் தனியார் விண்வெளித்துறை உலக அளவில் அதிக கவனம்…

தீய பழக்கங்களுக்கு மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும்-மயிலாடுதுறையில் சௌமியா அன்புமணி பேச்சு

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மாணவர்கள் சுதந்திரம் என்ற பெயரில் மது, புகையிலை போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாவதை தடுக்க வேண்டும். உங்களது நண்பர்கள் கட்டாயப்படுத்தினாலும் சூழலை அமைந்தாலும் தீய பழக்கங்களுக்கு மாணவர்களாகிய நீங்கள் நோ சொல்ல வேண்டும். மயிலாடுதுறையில் பசுமை தாயகம்…

சேந்தமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷே விழா

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் சொக்கன் கூட்டம் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர், மாயப்பெருமாள், பெத்தம்மாள், திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் கோ பூஜை, மகா கணபதி…

தமிழகத்தின் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான திருவிடைக்கழி கிராமத்தில் தைப்பூச திருவிழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே புகழ்பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.…

போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் பால தண்டாயுதபாணி திருகோயில்களில் தைப்பூசத் திருநாள்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த பால தண்டாயுதபாணி திருகோயில்களில் தைப்பூசத் திருநாள், மிக விமர்சியாக கொண்டாடப்பட்டதுஇதில், ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.இன்று, முருகப்பெருமானின், ஆறுபடை வீடுகள் உட்பட, உலகெங்கும் உள்ள…

பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட வட்டார நகர புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் என்.கே.சேகர் தலைமை வகித்தார். பாபநாசம் தெற்கு வட்டார தலைவர்…

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் புத்தகத் திருவிழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் நடைபெற்ற 3வது புத்தக திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த வான்வெளியை நிஜ உலகாக கானும் கோளரங்கம், பிகைன்ட் எர்த் அதிசயம். பல்லாயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்:- மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும்…

பாடியநல்லூரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டிருந்த கல்லறைகளை அகற்றியதற்கு உறவினர்கள் எதிர்ப்பு

செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர்‌ ஊராட்சிக்குட்பட்ட சுடுகாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட இறந்தவர்களின் கல்லறைகள் உள்ளது. இதில் இறந்தவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் சமாதிக்கு மண்டபம் கட்டி வருடா வருடம் அவர்களின் நினைவாக தீபம் ஏற்றி மாலை அணிவித்து அஞ்சலி…

கோவையில் ஸ்ரீஅன்னபூரணி எலக்ட்ரிகல்ஸ் சார்பாக மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம்

கோவையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி எலக்ட்ரிகல்ஸ் சார்பாக மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. தைப்பூசத்தை முன்னிட்டு முருக பெருமானின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் கோவை பிரசித்தி பெற்ற அருள்மிகு மருதமலை சுப்பிரமணிய சுவாமி…

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு விருத்தாசலத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது

பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” எனும் மையக்கருத்துடன் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வரும் 22ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ள இந்த மாநாட்டிற்கான திடல் விருத்தாசலம் அருகே உள்ள…

அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அரசியல் தற்கொலை பாதையாகும்-தமிமுன் அன்சாரி

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் இந்தியா கூட்டணி சுய பறிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில்தான் உள்ளது. அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அரசியல் தற்கொலை பாதையாகும் என்பதால் அதிமுகவிற்கு விஜய் செல்லமாட்டார், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி மயிலாடுதுறையில்…

வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காவடி திருவிழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பழனி ஆண்டவருக்கு தைப்பூசத்தை முன்னிட்டு காவடி திருவிழா.500 க்கும் மேற்பட்டோர் பால்காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு. மயிலாடுதுறை…

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம்திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பழையபேட்டையில் இருந்து கண்டியப்பேரி வழியாக ராமையன்பட்டி செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது சாலை மிகவும் பழுதடைந்து வருகிறது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக சாலையை சரி செய்ய நடவடிக்கை…

வலங்கைமான் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரமோற்சவ விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில், தைப்பூச பிரமோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, தினந்தோறும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவில் ஒன்பதாம் நாளான நேற்று திருத் தேரோட்டம்…

தைப்பூசத்தை முன்னிட்டு ஶ்ரீ சுப்பிரமணி சாமி ஆலயத்தில் சிறப்பு பூஜை

புதுவைவில்லியனூரில் தைப்பூசத்தை முன்னிட்டு ஶ்ரீ சுப்பிரமணி சாமி ஆலயத்தில் இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து காவடி பால்குடம் எடுத்து கொண்டு முருகா முருகா என்று மாட வீதியை சுற்றி வலம் வந்து…

கமுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகபெருமான் கேடயத்தில் முக்கியவீதிகளின் வழியாக நகர்வலம் வந்து நந்தவனத்தில் ஶ்ரீ அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரிநடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர் பின்னர் சைவமடம் சென்றடைந்தது இரவு முருகபெருமானுக்கு…

கூடலூர் அருட் பிரகாச வள்ளலார் சத்ய தருமச்சாலை தைப்பூசத் திருநாள்

கூடலூர் அருட் பிரகாச வள்ளலார் சத்ய தருமச்சாலை தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கொடியேற்றுதல் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்குதல் தேனி மாவட்டம் கூடலூர் திருஅருட் பிரகாச வள்ளலார் சத்ய தருமச்சாலை கூடலூர் கிராமச் சாவடித்தெரு பூங்காபள்ளி மேல்புறம் அமைந்துள்ள தருமச்சாலையில் 100…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு

பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான ‘அல்பென்டசோல்’ மாத்திரைகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினார்கள் . 5 முதல் 13 வயது வரை…

ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் விழா

தருமபுரி அடுத்து பழைய தருமபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நான்காம் காலயாக பூஜை நடைபெற்று திரவிய ஹோமம், மீன லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ…

எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு.

எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு. மதுரை ஓபுளாபடித்துறையில்,எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்டம் சார்பாக வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்,மதுரை மண்டல செயலாளர் முஜிபுர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை தெற்கு…

கந்தர்வக்கோட்டை அருகே இரத்த சோகை குறித்து விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு தினம் கடைபிடிக்கப்பட்டது. நீங்கள் இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா தேசிய…

வேப்பூர் அருகே திருமணத்திற்கு வந்தவர் மின்சாரம் தாக்கி பலியானார்

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு வந்தவர் மீது மின்தாக்கி பலியானார். கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்களம் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை மகன் சேகர் (வயது 55) என்பவர் வேப்பூர் வட்டம் மாங்குளம் கிராமத்தில் உள்ள தனது மாமன்…

பெரம்பலூரில் புதிய இ சேவை மையத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா

பெரம்பலூரில் புதிய இ சேவை மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார், முன்னாள் அமைச்சர் ஆ. ராசா. பெரம்பலூர்.பிப். 09. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 21.00 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்…

தேவாரம் பாடிப் போற்றும் ஆயிரம் நாள் நிறைவு விழா

தேவாரம் பாடிப் போற்றும் ஆயிரம் நாள் நிறைவு விழா திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் பாடிப் போற்றும் ஆயிரம் நாள் நிறைவு விழா திருவாரூர் கீழவீதி சக்கர விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரம் நாள் சொற்பொழிவாற்றிய புலவர் மு.விவேகானந்தன் அவர்களுக்கும் நிகழ்ச்சி…

பெருந்தோட்டம் கிராமத்தில் அருள்மிகு விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களின் கும்பாபிஷேகம்

சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ள அருருள்மிகு விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களின் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தினருடன் பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பெருந்தோட்டத்தில் பழமையான விசாலாட்சி சமேத…

புதுவை முத்துப்பிள்ளை பாளையத்தில் ம ஹர மகா கும்பாபிஷேக விழா

முத்துப்பிள்ளை பாளையத்தில் ம ஹர மகா கும்பாபிஷேக விழா புதுவை உழவர்கரை நகராட்சி முத்துப்பிள்ளை பாளையத்தில் காலை ஶ்ரீ பொன்னி முத்து மாரியம்மன் ஆலயத்தில் மஹர கும்பாபிஷேகம நடைபெற்றது இதில் அமைச்சர்கள் முதல்வர் ரங்கசாமி நமச்சிவாயம் தேனீ ஜெயக்குமார் மற்றும் முக்கிய…

பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடை அமல்படுத்த வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும்-மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் எதிர்பார்ப்பு

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் 4% சதவீத இட ஒதுக்கீடை அமல்படுத்த வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் எதிர்பார்ப்பு. கந்தர்வக்கோட்டை மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ‌.தங்கம்…

அதிமுக சார்பில் அகரம் சீகூரில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

பெரம்பலூர்.பிப்.09. அதிமுகவின் பொது செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும்முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் ஆலோசனைப்படி,வேப்பூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே எஸ் செல்வமணி தலைமையில் அகரம்சீகூர் அய்யனார் கோவிலில் கழகத்தின்…

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் ராமபிரானைப் போன்று நாமும் வீரத்திலும்,விவேகத்திலும் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சந்திர சேகரேந்திர சரஸ்வதி…

முப்பெரும் விழாவில் கோவில் குளம் சீரமைப்பு மற்றும் தன்னார்வளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்

முப்பெரும் விழாவில் கோவில் குளம் சீரமைப்பு மற்றும் தன்னார்வளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிட்டபுள் சொசைட்டி மூலம் பூரணாங்குப்பம் முழியன் குளத்தை சீர் செய்து படித்துறை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பல NGO – க்கலின் ஆதரவு…

குலசேகரநாதசுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா தேரோட்டம்

செங்கோட்டை அருள்மிகு ஶ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத ஶ்ரீ குலசேகரநாதசுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது , தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா வடம் பிடித்து தேரோட்டத்தை…

திருச்சியில் ரூ18.63கோடி செலவில் பறவைகள் பூங்கா துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருச்சியில் புதிய பறவைகள் பூங்காவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது 18 .63 கோடி ரூபாய் செலவில் புதிய பறவைகள் பூங்கா…

இராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி

இராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு மேனேஜிங் டிரஸ்டி அருணா தேவி முன்னிலை வகிக்க தாளாளர் .திருப்பதி செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர்…

அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள கலையரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆலோசனைக் கூட்டம் மற்றும் அரசியல் அங்கீகாரம் பெற்றுத்தந்த கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி அமைப்பாளர் மணிமொழியான், தலைமை தாங்கினார்…

ஜல்லிக்கட்டு போட்டி – முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி – முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் வருகின்ற பிப்ரவரி 11, 12…

தேசிய பூப்பந்தாட்ட போட்டி- தமிழக அணியில் விளையாடிய தென்காசி மாணவனுக்கு பாராட்டு

தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் வெள்ளிப்பதக்கம் தமிழக அணியில் விளையாடிய தென்காசி மாணவனுக்கு பாராட்டு தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக அணியின் சார்பில் விளையாடிய தென்காசி மாணவனை தென்காசி நகராட்சி தலைவர் ஆர்.சாதிர் கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டினார். 69…

வலங்கைமான் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில்பெற்றோர், ஆசிரியர் கூட்டம்

வலங்கைமான் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பெற்றோர், ஆசிரியர் கூட்டத்தில், மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக விளங்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு…

புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழா

புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழா நடைபெறுகிறது அதனை முன்னிட்டு தூத்துக்குடியில் இருந்து நடைபயணமாக புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு செல்கின்றனர். இதனை அடுத்து பாதயாத்திரை செல்லும் மக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமையில் தண்ணீர்…

செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஓசூர்- இலவச மருத்துவ முகாம்

அறிஞர் அண்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் ஜிஞ்சுபள்ளியில் இலவச மருத்துவ முகாம் . சேலம் பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நடத்தும் 7 நாட்கள்…

காங்கயத்தில் பாஜக கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

காங்கயத்தில் பிஜேபி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் டெல்லியில் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்திய முழுவதும் பிஜேபி கட்சியினர் வெடிகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த…

காங்கயத்தில் உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா

காங்கயத்தில் உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா – அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவங்கி வைத்தனர் திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் கரூர் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று உழவர் நலத்துறையின்…

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப, அவரது அறிவுறுத்தலின்படி மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர்.மகிபாலன் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு…

மத்தியஅரசை கண்டித்து பரமக்குடியில் திமுக கண்டன பொதுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பாக தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் பரமக்குடியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் .ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் மாநில மாணவர் அணி…

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவன் தினகரன் அவர்களுக்கு பாராட்டு விழா

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக தருமபுரி மாவட்டத்திலேயே முதன் முறையாக ஜனவரி 26ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற தேசிய குடியரசு தின விழா முகாமில் பங்கேற்று திரும்பிய தமிழ்த்துறை மாணவன் தினகரன் அவர்களுக்கு…

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக வெற்றி-பாஜக வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாவட்ட பொதுச் செயலாளர் ஏ பி கணபதி மாவட்டச் செயலாளர் லயன் கே சரவணன் ஒன்றிய…

நவாஸ்கனி எம் பி க்கு எதிர்ப்பு- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டஇந்து முன்னணி பாஜகவினர் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வக்பு வாரிய தலைவர் நவாஸ்கனி எம்.பி. வருகையை கண்டித்து போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக, இந்து முன்னணியினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்துக்களின் புனித மலையான அறுபடை வீடுகளில் ஒன்றானதிருப்பரங்குன்றத்திற்கு ஆய்வு பணிக்காக…

கடலூரில் போக்குவரத்து காவலர்களின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

கடலூரில் போக்குவரத்து காவலர்களின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி.. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் உத்தரவுபடி துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் அறிவுறுத்தலின்படியும் போக்குவரத்து காவல்துறை பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் பொழுது ஹெல்மெட் அணிய வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு…

இடைத்தேர்தல் வெற்றி-திமுக சார்பில் கடையநல்லூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்

தென்காசி தெற்கு மாவட்டம் திமுக சார்பில் கடையநல்லூரில்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியை கடையநல்லூர் நகரக் கழக செயலாளர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லதுரை மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஆனைகுளம் அப்துல் காதர்…

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் புவி அறிவியல் துறை சார்பில் நிலத்தடி நீர் தொடர்பான கருத்தரங்கம்

தஞ்சாவூர் ஒன்றிய அரசின் ஜல் சக்தி நிலத்தடி நீர் வாரியம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் புவி அறிவியல் துறை சார்பில் நிலத்தடி நீர் தொடர்பான கருத்தரங்கம் துணைவேந்தர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் ஒன்றிய அரசின் நீர் வாரியத்தின் மண்டல இயக்குநர்…

திருநெல்வேலி புதிய மாவட்ட ஆட்சியர் பதவி ஏற்பு

திருநெல்வேலி மாவட்டத்தின், 224-வது ஆட்சித்தலைவராக டாக்டர் இரா.சுகுமார், இன்று காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன்னர் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையின், கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்தார். பொறுப்பேற்ற பின்னர்,…

டெல்லியில் பாஜக வெற்றி-தென்காசியில் பாஜக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு பாஜக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட…

TNPSC குரூப்4 புதிய பாடத்திட்டத்தின்படி ஆயக்குடி மரத்தடி மையத்தின் வகுப்புகள் துவக்கம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2025 ல் நடத்த படவுள்ள தேர்வுகளின் தேர்வு அட்டவணையை ஏற்கனவே வெளியிட்டுள்ளது .அதே போல் புதிதாக தேர்வுகளின் பாடத்திட்டத்தையும் அதன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்களை முன்னரே தயார்செய்யும் பொருட்டு ஆயக்குடி மரத்தடி மையத்தில் 23/2/2025…

தாராபுரம் அருகே பரபரப்பு ஜாமீனில் வந்த அண்ணன்-தம்பியை கார் ஏற்றி கொல்ல முயற்சி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம்,தந்தையை கொன்றதற்கு பழிவாங்க ஜாமீனில் வந்த.அண்ணன்-தம்பியை கார் ஏற்றிகொல்ல முயன்ற சம்பவம் தாராபுரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் குட்டறைப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன்கள் சந்திரசேகர் (வயது 29) மற்றும்…

நெல்லை மாவட்ட திமுக அலுவலகத்தில் அங்கன்வாடிகளுக்கு எடை மெஷின் வழங்கும் விழா

நெல்லை மாவட்ட திமுக அலுவலகத்தில், திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.கழகம் சார்பில் 335 அங்கன்வாடிகளில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் 600க்கும் மேற்பட்ட நபர்களுக்குபெட்ஷீட், சேலை மற்றும் எடை மெஷின் இல்லாத 35 அங்கன்வாடிகளுக்கு எடை மெஷின் வழங்கும் விழா நடைபெற்றது.…

கோவிந்தப்பேரி ஊராட்சியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம், கடையம் வட்டாரம் கோவிந்தப்பேரி கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் ஊராட்சி மன்றதலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சியில் நடைபெற்ற வருமுன் காப்போம் மருத்துவ முகாமிற்கு கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன்…

புத்தகத் திருவிழாவில் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் ஆட்சியர் தலைமையில் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மூன்றாவது புத்தகத் திருவிழாவில் ரோட்டரி சங்கம் சார்பில் 800. புத்தகங்களும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 200 புத்தகங்களும் என 1000 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.…

தாராபுரத்தில் அரசு அதிகாரிகளை தாக்க முயன்ற விவசாயி கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கொட்டாப்புள்ளி பாளையம் பகுதியில் 189. வீட்டு மனைகள்-189 என்ற மூலம் ஸ்கீம் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. செயல்படுத்தப்பட்டு அதில் 71 குறைந்த வருவாய் வீடுகள் கட்டப்பட்டு பொதுமக்களின் உபயோகத்திற்காக விற்கப்பட்டு…

குத்துக்கல் வலசை ஊராட்சியில் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணி துவக்க விழா

தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை ஊராட்சியில் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணி துவக்க விழா நேற்று பிப் 7ம் தேதி நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார் உடன் தென்காசி…

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு நியமித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய இளைஞர் விவகார அமைச்சகத்தின் இயக்குநராக வந்திதா பாண்டேவை நியமித்துள்ளதாகவும், உடனடியாக மாநில அரசின் பதவியில் இருந்து விடுவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகள்…