செய்தியாளர் வெங்கடேசன்
நெமிலி மேலாந்துரை ஊராட்சி ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிஒன்றிய தலைவர் வடிவேலு தொடங்கி வைப்பு:-
ராணிப்பேட்டை
முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தீவிரம். மேலாந்துரை கிராம மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், மேலாந்துரை பகுதியில் சாலை வசதி அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில், சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை, நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு அவர்கள் நேற்று தொடங்கி வைத்து, பணி நடைபெற்று வந்தது. மேலும் இப்பணியை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்து, விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக் கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.