திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளீர் கலைக்கல்லூரியில் 55 வது ஆண்டு விழா கொண்டாட பட்டது.இவ்விழாவில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர்.மாரிமுத்து தலைமை உரை ஆற்றினார்,

துணை ஆணையர் .வெங்கடேஷ் முன்னிலை வகித்தார், கல்லூரியின் முதல்வர்.புவனேஷ்வரி வரவேற்புரை மற்றும் ஆண்டறிக்கை வாசித்தார், அறங்காவலர் குழு தலைவர்.சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலைமாமணி சுகிசிவம் சிறப்புரையாற்றி மாணவியர்களுக்கு பரிசு வழங்கினார், மேலும் திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள்.தனசேகர், பாலசுப்பிரமணி, அன்னபூரனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *