கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி கிருஷ்ணராயுரம் மேற்கு ஒன்றியம் சேங்கல் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ 1,70,88,000 மதிப்பீட்டில் சின்னசேங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக 8 வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கட்டளை ரவிராஜா, மாவட்ட பிரதிநிதி ஜி. பி. சிவகுமார் ஒன்றிய துணை செயலாளர் இளவரசன், ஒன்றிய பொருளாளர் ரவிச்சந்திரன் முத்தமிழ்செல்வன் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ரைட் செந்தில், சிவசக்தி மணவாசி கிளை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய தொண்டரணி துணை அமைப்பாளர் தில்லை நடராஜன், முனையனூர் பாக முகவர் IT WING கோபி, கழக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள், தலைமை ஆசிரியர் , இருபாலர் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.