விருத்தாசலம், ஏப். 8:

நிறுத்திவைக்கப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியதை வரவேற்று கடலூர் மேற்கு மாவட்ட திமுக மற்றும் விருத்தாசலம் நகர திமுக சார்பில் விருத்தாசலத்தில் திமுகவினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்எஸ்.கணேஷ்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விருத்தாசலம் கடைவீதி நான்கு முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து கொண்டாடியதுடன், வாகன ஓட்டுகள் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்து கொண்டாடினர்.

இதில் கடலூர் மேற்கு ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் ராமு, நகர துணை செயலாளர் நம்பிராஜன், மாவட்ட பிரதிநிதி ஆட்டோ பாண்டியன், அவைத்தலைவர் செங்குட்டுவன், நகர பொருளாளர் மணிகண்டன், நகர் மன்ற உறுப்பினர்கள் தங்க அன்பழகன், தீபா மாரிமுத்து, அறிவழகி முருகன், வசந்தி புருஷோத்தமன், வழக்கறிஞர் இளங்கோவன், டைலர் சிவா, மெக்கானிக் சரவணன், பூக்கடை வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப அணி துரை அரசன், பாசில், ராஜா, பரந்தாமன், காமேஷ், வினோத், விக்கி, ராமு, ஆறுமுகம், நந்தா, சேரன், கொளஞ்சி, வீரமணி, மணலூர் வீரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends