எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பிரமோற்சவ திருவிழா. ஐந்தாம் நாளான இன்று தெருவடைச்சான் என்கிற பஞ்ச மூர்த்திகள் சகோபுர வீதியுலா. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு தையல்நாயகி உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது.நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய் தளமாகவும்,முருக பெருமான் செல்வ முத்துக்குமார சுவாமியாகவும்,சித்த மருத்துவத்தின் தலைவரான தன்வந்திரியும் தனி சன்னிதி கொண்டு அருள்பாளிக்கின்றனர்.

இக்கோவிலில் பிரமோற்ச்சவ திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இவ்விழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவான இன்று பஞ்சமூர்த்திகள் தெருவடைச்சான் என்கிற சகோபுர வீதிஉலா நடைபெற்றது.

சந்நிதியிலிருந்து பஞ்சமூர்த்திகள் சகோபுரத்தில் எழுந்தருள மகாதீபாராதனை உடன் வீதியுலா துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சகோபுபரத்தை வடம் பிடித்து இழுத்தனர்.உள்ளூர்,வெளியூர் பக்தர்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டினர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் வடம் பிடித்திழுத்து வழிபட்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *