தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரம் அருள்மிகு ஸ்ரீ தில்லாபுரி அம்மன் திருக்கோயிலில் சித்திரை மாதம்
அம்மாவாசை அன்னதானம் முன்னிட்டு சிறப்பு அன்னதானம்..
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தில்லாபுரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் மாதம்தோறும் அமாவாசை தினத்தன்று வடை பாயசத்துடன் உணவுகள் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது,
இந்த நிலையில் 27.04.2025 அன்று சித்திரை மாதம் அமாவாசையை முன்னிட்டு சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த அன்னதான நிகழ்ச்சியில் தாராபுரம் காங்கேயம் கோட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் கண்காணிப்பு குழு உறுப்பினருமான முனைவர்.சிவசங்கர், கவி ஸ்ரீ பிரின்டர்ஸ் உரிமையாளர் முனியப்பன், புளிய மரத்து கடை சாமி மெஸ் உரிமையாளர் பெருமாள் சாமி, பொன்ராம், பாத்திமா, பாயாசம் பார்வதி, சந்தான லட்சுமி ஆனந்த், சாதிக் பாய், மாஸ்டர் முத்துக்குமார், தாரா முரளி, ஜே.சி.பி வாகன உரிமையாளர் கார்த்திகேயன், ஷாஜகான், அப்பாஸ் அலி, மணி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.