கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட பள்ளப்பட்டியில் திமுக கட்சியில் உறுப்பினராக இருந்த ஷாநகர் தமிமுல் அன்சாரி திமுகவில் இருந்து விலகி பள்ளப்பட்டி நகரக் கழகச் செயலாளர் சாதிக் பாட்ஷா, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் கரிகாலன் தலைமையில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர், கரூர் மாவட்ட அதிமுக கழகச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டர். கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.