சிறுதுளி அமைப்பு சார்பில் “நல்ல தண்ணி” திட்டம் அறிமுகம்

கோவையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி அமைப்பு , நீர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் முயற்சிகளில் தேசிய அளவில் புகழ்பெற்றது, நகரின் பல நீர்நிலைகளை தொடர்ந்து மாசுபடுத்தும் கழிவுநீரை திறம்பட சுத்திகரிக்க கோவை மாநகராட்சிக்கு 4 நிலையான தீர்வுகளை பரிந்துரைத்துள்ளது.

‘நல்ல தண்ணி’ முயற்சியின் கீழ் சிறுதுளியால் இந்தத் தீர்வுகளைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும் திட்டங்களின் விளைவுகளை எடுத்துக்காட்டுவதற்காக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களிடம் பேசிய சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் அவர்கள் , 2 தசாப்தங்களுக்கும் மேலாக கோயம்புத்தூரில் ஏராளமான நீர் பாதுகாப்பு மற்றும் நீர்நிலை மறுசீரமைப்பு பணிகளைச் செய்து அற்புதமான முடிவுகளைக் கண்டிருந்தாலும், கிட்டத்தட்ட அனைத்து நீர்நிலைகளிலும் கழிவுநீர் கலப்பதைக் தடுக்கமுடியவில்லை என்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில்,

“காலப்போக்கில், நகரத்திலிருந்து வரும் கழிவுநீர் நமது நீர்நிலைகளுக்குள் நுழையத் தொடங்கியது. ஏரிகளில் அதிகப்படியான கழிவுநீர் இருப்பதால் மழைநீர் குறைந்தபட்ச அளவில் மட்டுமே நீர்நிலைகளுக்குள் செல்கிறது. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நமது ஏரிகள் ஆழமாக இருப்பதால், கழிவுநீருடன் கலக்கும் நீர் தரையில் சென்று, நமது ஆழ்துளை கிணறுகளைப் பாதிக்கிறது. ஆழ்துளை கிணறுகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் பெரும்பாலான அறிக்கைகள் அதிர்ச்சியூட்டும் முடிவுகளைத் தருகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.

சிறுதுளி கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாக சாத்தியமான கழிவுநீர் சுத்திகரிப்பு தீர்வுகளை ஆய்வு செய்து வருகிறது, இதன் விளைவாக கடந்த ஆண்டு “நல்ல தண்ணி” திட்டம் தொடங்கப்பட்டது. இந்த முயற்சி கழிவுநீரை திறம்பட மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் சுத்திகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.

சிறுதுளியின் அறங்காவலர் சதீஷ், தண்ணீரை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வளமாக பார்க்கக்கூடாது என்று வலியுறுத்தினார். முறையான சுத்திகரிப்பு மூலம், பயன்படுத்தப்பட்ட தண்ணீரை கட்டுமானம், விவசாயம், தோட்டக்கலை, தொழில்துறை செயல்முறைகள், சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு குடிநீரல்லாத நோக்கங்களுக்காக மறுசுழற்சி செய்யலாம் என்று அவர் கூறினார்.

சிறுதுளியின் வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினரும் அதன் கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டங்களின் தலைவருமான கிருஷ்ணசாமி, தன்னார்வ தொண்டு நிறுவனம் பரிந்துரைத்த 4 முக்கிய தீர்வுகளை வழங்கினார்.

கோவை மாநகராட்சி (CCMC) கழிவு நீரை சுத்திகரிப்பதற்காக பல இடங்களில் கழிவு நீரை சுத்திக்கரிப்பு நிலையங்களை அமைத்துள்ளது. இது தவிர ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான குளங்களிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STP) அமைக்கப்பட்டிருக்கின்றன, இருந்தபோதிலும் குறைந்த அளவு கழிவுநீரயே நம்மால் சுத்திகரிப்படுகிறது. ஒவ்வொரு குடும்பமும் தங்களின் தேவைகேர்ப்ப உபயோகிப்பது சிறந்த தீர்வாகும்.

தங்கள் பங்கிற்கு கழிவு நீர் ஆற்றில் கலக்கும் இடங்களில் எளிமையான கழிவு நீரை சுத்தீகரிப்பு முறைகளை கையாள்வது சாத்தியமாகும் என்று சிறுதுளி வழியுறுத்துகிறது.

பைடோ ரெமிடியேஷன் (phyto remediation – constructed and floating wetlands), பைகோ ரெமீடியேஷன் (phyco remediation – treating using algae), பயோ ரெமிடியேஷன் ( bio remediation using microbes) மற்றும் ஒரு நாளில் 2 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட சிறிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து, ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

  1. சுண்டபாளையம் பெரியபள்ளத்தில் வெட்டிவேரை பயன்படுத்தி கழிவு நீரை சுத்திகரிக்கும் முறையை ஆய்வு செய்துள்ளது. இத்திட்டதில், நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இதன் சம்பந்தமாக தொழில்நுட்பக் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
  2. ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் சென்டர் பார் கங்கா ரிவர் பேசின் மேனஜ்மென்ட் (Centre for Ganga River Basin Management) என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை குறிச்சி குளத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு, திட்ட அறிக்கை தயாரித்து செய்யல்படுத்த ஒருங்கிணைத்து வருகிறது.
  3. சிங்காநல்லூரிலுள்ள எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் வழியாக ஓடும் கழிவு நீரோடையில் மாதிரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டு அதன் செயல்திறன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
  4. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு 2025-26 ஆம் ஆண்டு செயல்படுத்துவதாக இருக்கின்றது.
  5. நஞ்சுண்டாபுரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 10 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை சிங்காநல்லூர் குளத்தில் நிரப்ப மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  6. பைகோ ரெமீடியேஷன் (phyco remediation – treating using algae), எனப்படும் முறையை கோவை மாநகராட்சியின் வார்டு 14ல் உள்ள உருமண்டம்பாளையம் குட்டையில் செயல் படுத்தப்பட்டு அதன் நன்மைகளை ஆய்வுசெய்து வருகிறது.
  7. கோவை மாநகராட்சியின் வார்டு 14ல் உள்ள வெள்ளகினர் தெற்குச் சோலை குட்டையில் பயோ ரெமிடியேஷன் முறையில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதற்கான வேலைகளை செய்துவருகிறது.