மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி
தென்காசி மாவட்டம் தென்காசி அதனை சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஈதுல் அல்ஹா என்ற ஹஜ் பெருநாள் தொழுகை காலை 7:00 மணி முதல் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு தொழுகை நிறைவேற்றப்பட்டது.செங்கோட்டை தஞ்சாவூர் பள்ளிவாசல் ஜமாத் சார்பாக சிறப்பு தொழுகை தலைமை இமாம் அபூபக்கர் சித்திக் சிறப்பு தொழுகையை நடத்தி வைத்தார்
நிகழ்ச்சியில் ஜமாத் தலைவர் மைதீன் பிச்சை என்ற முதலாளி துணைத் தலைவர் அக்பர் பாதுஷா செயலாளர் திவான் அகமது சா பொருளாளர் மைதீன் ஆகியோர் சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர் இந்த தொழுகையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தங்களின் தலையாயக் கடமையான தொழுகையை நிறைவேற்றினார் இந்த பெருநாளின் நோக்கத்தை தலைமை எல்லாம் இவ்வாறாக விவரித்தார்
இறைவனின் தூதர் இப்ராஹிம் அவர்கள் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தார். இறையருளால் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு மகன் பிறந்தார். இந்த குழந்தைக்கு இஸ்மாயில் என பெயரிட்டனர்.
ஒரு முறை இறைவன் இப்ராஹிம் அவர்களிடம்,” உங்கள் குழந்தையை எனக்கு பலியிடுங்கள்,” என ஆணையிட்டார் இப்ராஹிம் அவர்கள் கலங்கவில்லை. மாறாக குழந்தையை பலியிட துணிந்தார். இறைவனின் கட்டளைக்கு அவர் அந்த அளவுக்கு மரியாதை தந்தார்.
என்ன நடந்தாலும் பரவாயில்லை இறைவன் பார்த்துக் கொள்வான், இறைவனின் சித்தமே என்றும் நிலையானது என நம்பினார்.
குழந்தையை பலியிட இருந்த நேரத்தில், “நில்லுங்கள் இப்ராஹிம்! இதோ இந்த ஆட்டை பலியிடுங்கள்,” என சொல்லி ஒரு ஆட்டை இறைவன் இறக்கி வைத்தார்.
இப்ராஹீம் அவர்களின் பக்தியை சோதிப்பதன் மூலம், எந்த சோதனை வந்தாலும், இறைவனை நம்ப வேண்டும் என அல்லாஹ் இந்த உலகுக்கு உணர்த்தினார்.
அதன் பின் ஆடு பலியிடப்பட்டது இதன் அடிப்படையிலேயே ஒரு ஆட்டை பலியிட்டு ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், இன்னொரு பங்கை ஏழைகளுக்கும், ஒரு பங்கை தங்களுக்குமாக இஸ்லாமியர்கள் வைத்துக் கொள்கின்றனர்.
இதன் மூலம் தங்கள் தர்ம குணத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இதனால் தான் பக்ரீத் பண்டிகையை ஈகை திருநாள் என போற்றுகின்றனர். எனக் கூறினார் ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகையின் முடிவில் ஆரத் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.