பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய பால் குட திருவிழா பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில்வே ஸ்டேசன் ரோட்டில் எழுந்தருளிள்ள ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு பாபநாசம் குடமுருட்டி ஆற்றங்கரையில்
இருந்து பக்தர்கள் பால்குடம் ,எடுத்து மேல தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பத்ர காளியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவின் ஏற்பாடுகளை பாபநாசம் பத்ர காளியம்மன் திருக்கோவில் கிராமவாசிகள் நாட்டாமைகள் செய்திருந்தனர்.