அலங்காநல்லூர், ஜூன். 08.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சால்வார்பட்டி கிராமத்தில் கண்டன் வகையறாக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்டியம்மன்,சின்ன கருப்பு, காஞ்சரடி, கழுவடி சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. மூன்று கால யாக பூஜையில் கணபதி ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், விநாயகர் பூஜை, மஹாலக்ஷ்மி பூஜை, கோ பூஜை, உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி ராமேஸ்வரம், அழகர்கோவில், உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு கொண்டுவரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வானத்தில் கருடன் வட்டமிட மேல தாளம் முழங்க கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சுவாமிக்கு அபிஷேகமும், தீபாரதனைகளும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சால்வார்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *