பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டம் கவிஞானி திரு. மு. ஞானமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற, துணைத்தலைவர் திரு. த. பழனிவேல் வரவேற்புரை ஆற்றினார்.

பொதுச்செயலாளர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம் கூட்ட நோக்குரை வழங்கினார். கூட்டத்தில் மண்டல, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், செயலாளர்கள், தமிழ்ப் பண்பாட்டு நலனில் ஈடுபாடுடைய சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் மூலம் பல்வேறு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

  1. 45 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு திட்டம்:
    தமிழக அரசு உலகத் திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழிபெயர்க்க திட்டமிட்டிருப்பது பாராட்டுதற்குரியது. இது திருக்குறளின் உலகப் பரவலையும், தமிழின் பெருமையையும் வலியுறுத்தும் செயல் எனக் கூட்டம் பாராட்டியது.
  2. அரசாணைகள் தமிழில் மட்டும்:
    தமிழக அரசின் இந்த அறிவிப்பு, தமிழ் மொழியின் வளர்ச்சி மற்றும் சட்டத் தெளிவை முன்னிறுத்தும் சிறப்பான முடிவாக காணப்படுவதால், அதற்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
  3. திருவள்ளுவர் சிலை திறப்பு:
    மருமகன் பேராசிரியர் வி.ஜி. சந்தோசம் அவர்கள் திருவள்ளுவர் சிலையை திறந்தமைக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தது.
  4. பிரான்ஸ் மாநாட்டில் பங்கேற்பு:
    உலகத் தமிழராய்ச்சி நிறுவனமும், பிரான்ஸில் உள்ள தமிழ்ச் சங்கங்களும் இணைந்து நடத்தும் மாநாட்டில் 25 பேர் கலந்துகொள்வதற்கான முடிவுகள் ஏற்கப்பட்டன.
  5. நீதிபதிகள் நியமனம் – சமுகநீதி புறக்கணிப்பு:
    சமுதாய விரிவான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தாமல் நடக்கும் நியமனங்கள் எதிர்க்கப்பட்டு, சமுகநீதிக்கு மாறான செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தது.
  6. RBI தங்க நகை அடகு விதிமுறைகள்:
    RBI வெளியிட்ட புதிய நடைமுறைகள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, அவற்றை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
  7. எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு:
    அந்தி மக்களை பாதிக்கும் இவ்விலை உயர்வுகள் குறித்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  8. ஹஜ் பயண கட்டுப்பாடுகள்:
    மத்திய அரசு ஹஜ் பயணத்திற்கு விதித்துள்ள ஒதுக்கீடு குறைப்புகளை நீக்க வலியுறுத்தப்பட்டது.
  9. தமிழக போக்குவரத்துத் துறை சீர்திருத்தம்:
    சொந்த ஊழியர்களின் பதவி உயர்வை புறக்கணித்து வெளிநியமனங்கள் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்து, சீர்திருத்தம் வேண்டுமென தீர்மானம் எடுக்கப்பட்டது.
  10. தர்பூசணி விவசாயிகளுக்கான இழப்பீடு:
    தர்பூசணி விவசாயிகளின் பொருளாதார இழப்பை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என கோரப்பட்டது.
  11. போலி சான்றிதழ் வழியாக அரசு வேலைக்கு நுழைந்தோர்:
    இவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
  12. நிர்வாக மாற்றங்கள்:
    சிறப்புக் காரணங்களால் சிறப்பு நிர்வாகியாக இருந்த முனைவர் மா. நா. சிவசுப்பிரமணியன் இடம் மாற்றப்பட்டு, புதிய நிர்வாகியாக திரு. ப. பவானி நியமிக்கப்பட்டார்.
  13. பல்வேறு திறன் மேம்பாட்டு முகாம்கள்:
    தமிழ் வளர்ச்சி, பண்பாட்டு விழிப்புணர்வு, சமூக சேவை, பெண்கள் முன்னேற்றம் மற்றும் இளைஞர் திறன்கள் சார்ந்து கிளைகளில் சிறப்பு முகாம்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

நிறைவுரை:
துணைத்தலைவர் திரு. வ. தசரதன் நன்றியுரை ஆற்றினார்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *