தென்காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியில் பத்தாவது வகுப்பு மற்றும் +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஆழ்வார்குறிச்சி கீழத்தெரு சைவ வேளாளர் சங்கத்தில் வைத்து அரசு தேர்வு எழுதிய பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அரசுத் தேர்வில் 80% விழுக்காடு மற்றும் அதற்கு மேல் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த பாரட்டு விழா நிகழ்ச்சிக்கு சைவ வேளாளர் சங்கதின் தலைவர் ம.சங்கரநாரயணன் பிள்ளை தலைமை தாங்கினார் சங்கத்தின் துணைத் தலைவர்
பி.ராமையா பிள்ளை உப தலைவர், இ.குமார் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்

தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாநில மண்டல துணை செயலாளர், தென்காசி மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் ஆழ்வார்குறிச்சி கீழத்தெரு சைவ வேளாளர் சங்க செயலாளர் ஆ.சை.மாணிக்கம் பிள்ளை சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

11 வது வகுப்பு பொது பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஐ மகாலட்சுமி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற செ.சக்தி, ரா. இசக்கியம்மாள் ஆகியோருக்கு ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி மேல்நிலைப் பள்ளியின் செயலர் பேராசிரியர் மு.சுந்தரம், சைவ வேளாளர் சங்கத்தின் தலைவர் மு சங்கரநாராயணன் கௌரவ ஆலோசகர் மாடசாமி ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ராமசாமி ஆகியோர் ஷீல்டு பாரதியார் கவிதை புத்தகத்தை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

சைவ வேளாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சு.முருகன் பிள்ளை, துணைச் செயலாளர் குமார் பிள்ளை செயற்குழு உறுப்பினர்கள் ந.சுப்பிரமணி யன்பிள்ளை சாய் சுப்பிரமணியன் பிள்ளை, முன்னாள் தலைவர் ஆறுமுகம் பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் உப தலைவர் ரா.முத்துப்பிள்ளை அனைவருக்கும் நன்றி கூறினார்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *