கடலூர் மாவட்டம் புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் முகாம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் புவனகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையோடு இணைந்து பாஜக சார்பில் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் முன்னாள் எம்எல்ஏ தமிழ்அழகன் தலைமையில் நடைபெற்றது

முன்னாள் மாவட்ட செயலாளர் திருமாவளவன் ஒன்றிய துணைத் தலைவர் லட்சுமி நரசிம்மன் முன்னாள் பட்டியல் அணி மாநில துணை தலைவர் புவனை வெற்றிவேல் கோபிநாத் கணேசன் தியாகு ஆர் கே சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்‌

ரத்ததானம் முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வை மூத்த நிர்வாகிகள் எஸ் வி ஸ்ரீதரன் வேட்டைகுடி எழிலரசன் மற்றும் எஸ் ஜி எம் ரமேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்

முகாமில் ஏராளமான இளைஞர்கள் கட்சியினர் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்தம் தானம் அளித்தனர் ரத்ததானம் அளித்த இளைஞர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்பட்டது இதேபோன்று‌ சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

முன்னதாக புவனகிரி கடைவீதியில் உள்ள வள்ளலார் ஆலயத்தில் அண்ணாமலை பெயருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனியப்பன் விஜயகுமார் பழனி அரவிந்தன் கவிசெல்வன் கலைவாணி இளைஞரணி சதீஷ்குமார் பாலு விக்னேஸ்வரன் புவனகிரி அடிகளார் இளங்கோவன் சோமசுந்தரம் திருமூர்த்தி ஜோதி நடராஜன் கந்தசாமி நாகராஜன் ஆட்டோ ராஜேந்திரன் இளையமாறன் ஞானசபாபதி நாராயணன் ராஜேந்திரன் சண்முகம் சாந்தலட்சுமி வள்ளி பழனியம்மாள் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர் முடிவில் திருமூர்த்தி நன்றி கூறினார்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *