தென்காசி,
தென்காசியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்ஆ பள்ளிவாசல் ஜமாத் சார்பில் தென்காசி முஸ்தபியா நடுநிலைப் பள்ளியில் வைத்து ஈதுல் அல்ஹா என்னும் ஹஜ் பெருநாள் தொழுகை நடந்தது. பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவிக் கொண்டு பெருநாள் வாழ்த்துக்களை பரி மாறி கொண்டனர்.
மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜூம்மாபள்ளிவாசல் தலைவர் மசூத்அலி தலைமை வகித்தார். பள்ளியின் இமாம் பஷீர் பிர்தௌஷி சிறப்பு தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார்.
தொழுகையில் செயலாளர் அமானுல்லாஹ், பொருளாளர் ரிசவு முகம்மது, துணைத் தலைவர் மைதீன் சேட்கான், துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் ஷாஜி நாகூர் மீரான், நயி னார் முஹம்மது, அலி, மைதீன், ஹாரூன் ரஷீது, பீர்ஜாத் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர்கள் இஸ்மத் மீரான், அபாபீல் மைதீன், ஜமால் மைதீன், சாகுல் ஹமீது, அப்துல் ரஹ்மான், பீர், மீரான், ஹக்கீம், கோதரி, மசூது உள்ளிட்ட ஏராளமான ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர்.
தென்காசி ஜாக் ஜமா அத் அமைப்பின் சார்பில் நேற்று காலை 7 மணியள வில் ஈதுல் அல்ஹா பெரு நாள் தொழுகை பழைய ஆர்.டி.ஓஆபிஸ் வளாகத் தில் வைத்து நடைபெற்றது. இதில் தொழுகை நடத்தி குத்பா பேருயுரையை அமைப்பின் மாநில துணை தலைவர் உஸ்மான் ஃபிர்தெளஸி நிகழ்த்தினார். பின்னர் ஒவ்வொருவரும் தங் களுக்குள்ளேயே வாழ்த் துக்களை பரிமாறிக் கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
பொட்டல் புதூரில் பெருநாள் தொழுகை தென்காசி மாவட்டம், கடையம் அருகிலுள்ள,பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
தமிழகத்தில் ஈதுல் அல்ஹா எனும் பெருநாள் தொழுகை இன்றும், நாளையும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பள்ளிவாசல்கள் அல்லது திடலில் வைத்து, சிறப்பு தொழுகை தொழுது, ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளை இறைவனுக்காக பலியிட்டு, அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்குவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
பொட்டல் புதூர் விஸ்வா நகரில் அமைந்துள்ள ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் அமைப்பிற்குச் சொந்தமான மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் யாசிர் பிரதவ்ஸி தொழுகை நடத்தினார்.பள்ளிவாசல் முன்னாள் தலைவர் கட்டி அப்துல் காதர் உள்ளிட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.