செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெரியவெளிக்காடு ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி துவக்கப்பட்டது.
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக விவசாய நிலங்களில், இந்த ஆண்டு ஒரு கோடியே இருபது லட்சம் (1,20,00,000) மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பாக ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரச மரங்கள் இன்று நடப்பட்டன.

காவேரி கூக்குரல் இயக்கம் தமிழக மற்றும் கர்நாடக மாநில விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுதோறும் இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு (2024 – 25) நிர்ணயம் செய்யப்பட்ட 1.21 கோடி மரக்கன்றுகள், விவசாயநிலங்களில் நடப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் (2025 – 2026) தமிழகத்தில் மட்டும் 1.20 கோடி டிம்பர் மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தின் இலக்கு. 3,46,000 இதன் தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் பெரியவெளிக்காடு தலைவர் ஏழுமலை தலைமையில் சிறப்பு விருந்தினர் சீவாடி தலைவர் அரங்கநாதன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வார்டு உறுப்பினர்கள் கிராம பெரியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து வருகிறது. அதனுடன் கூடுதலாக பேரூர் ஆதீனத்துடன் இணைந்து, தமிழகத்தில் உள்ள 12,500 கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 33,000 கிராமங்களிலும் அரச மரங்களை நடுவதை இலக்காகக் கொண்டு ஒரு கிராமம் ஒரு அரச மரம் என்ற திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 636 கிராமத்திலும் அரச மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புற பகுதிகளில் அரச மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த மரம் நடும் விழாக்களில் சட்ட மன்ற உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டத்தின் மூலம் நடவு செய்த அரச மரக்கன்றுகள், அந்தந்த வட்டாரத்தை சேர்ந்த தன்னார்வலர் குழுக்களால் பராமரிக்கப்பட உள்ளன.

ஈஷா மூலம் கடந்த 25 ஆண்டுகளாக விவசாய நிலங்களில் 12.1 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளனன. விவசாயிகள் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகள் ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலம் குறைந்த விலையில் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றன.

தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற வருமானம் தரக்கூடிய டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு வருகின்றனர். இவற்றை ஏக்கருக்கு 300 மரங்கள் வரை நடலாம். அல்லது வேலி ஓரங்களில் மட்டும் 100 மரங்கள் வரை நடவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கும் மரக்கன்றுகளை பெறவும் 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *