தமிழகத்தில் முதல் விற்பனை மையமாக நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் கோவையில் துவக்கம்
மூன்று சக்கர மின்சார வாகனங்களின் முன்னனி பிராண்டான நவ்ரங் தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் தனது விற்பனை மையத்தை துவங்கியது…
வட இந்திய சந்தையில் மின்சார வாகனங்கள் உற்பத்தியில் முன்னனி நிறுவனமான ஜனாஷா நிறுவனத்தின் நவ்ரங் மின்சார மூன்று சக்கர மின்சார வாகனங்கள் தனது விற்பனை சந்தையை விரிவு படுத்தும் விதமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது விற்பனை மையத்தை துவக்கி வருகிறது..
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் முதல் விற்பனை மையமாக கோவை துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ.காலனி பகுதியில் நவ்ரங் தனது விற்பனை மையத்தை துவக்கி உள்ளது இதற்கான துவக்க விழாவில் நவ்ரங் பிராண்ட் தலைவர் அபிஷேக் பாண்டே மற்றும் ஜனாஷா குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் இயக்குனர் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய விற்பனை மையத்தை துவக்கி வைத்தனர்..
தொடர்ந்து செய்தியாளர்களிடம் நவ்ரங் மின்சார வாகனங்கள் குறித்து பேசுகையில்,நவ்ரங் வாகனங்கள் முழுமையாக மாசு இல்லாத செலவு குறைந்த மற்றும் நம்பகமான போக்குவரத்து வசதிகளை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்..
குறிப்பாக நீண்ட தூரம் இயங்கும் வகையில் நவீன பேட்டரி தொழில்நுட்பத்தால் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், பயணிகளை ஏற்றி செல்வது, போக்குவரத்து சரக்குகள் டெலிவரி மற்றும் வணிகப் பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் நவ்ரங் மின்சார வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும்,மேலும் சில குறிப்பிட்ட வணிக பயன்பாட்டுகளுக்கு தகுந்தபடி வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைனில் தயார் செய்யப்பட்டு தருவதாகவும் தெரிவித்தனர்..
இந்த சந்திப்பின் போது கோவை கிளை நவ்ரங் விற்பனை மையத்தின் தலைமை செயல் அதிகாரி கண்ணபிரான் உடனிருந்தார்…