கோவை நேரு நகர் பகுதியில் உள்ள (First Cry Intellitots pre School and Day care) ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் புதிய வகுப்புகள் துவக்கம்
ஆர்வத்துடன் வந்த மழலை குழந்தைகளை கனிவுடன் வரவேற்ற ஆசிரியைகள்
கோவை நேரு நகர் பகுதியில் செயல்பட்டு வரும், ஃபர்ஸ்ட் க்ரை இன்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் மற்றும் டே கேர் மையம், குழந்தைகளின் கல்வி மற்றும் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக அனுபவம் மிக்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு திறம்பட செயல்பட்டு வருகின்றது..
பள்ளி துவங்கி இரண்டாவது வருடம் துவங்கிய நிலையில், பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த பள்ளியில் புதிய அட்மிஷன்கள் துவங்கிய நாள் முதலே பெற்றோர்கள் ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்..
இந்நிலையில் கோடை கால விடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்டு புதிய வகுப்புகள் துவக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இதில் மழலை குழந்தைகளை ஆர்வமுடன் அழைத்து வந்த பெற்றோர்கள் பள்ளியில் விட,குழந்தைகளை ஆசிரியர்கள் கனிவுடன் அழைத்து சென்றனர்(Back To School)பேக் டூ ஸ்கூல் என துவங்கி வண்ண பலூன்கள் மற்றும் ஓவியங்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட பள்ளி முன்புறத்தை கண்ட குழந்தைகள் பள்ளிக்குள் தங்கள் முதல் அடிகளை எடுத்து வைத்து உள்ளே வந்தனர்..
(PAULS EDUCATIONAL TRUST)பால்ஸ் எஜுகேஷனல் டிரஸ்ட் கீழ் இயங்கி ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூலுக்கு தங்கள் குழந்தைகளை விட வந்த பெற்றோர்களும் புதிய அனுபவங்களை பெறும் விதமாக பள்ளி முன்பாக செல்ஃபி ஸ்பாட்டில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்..
முதல் முறையாக பள்ளிக்கு வரும் குழந்தைகளை வரவேற்கும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி பெற்றோர்களையும் புதிய அனுபவத்திற்கு கொண்டு சென்றது..
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை,ஃபர்ஸ்ட் க்ரை இண்டெலிடாட்ஸ் ப்ரீ ஸ்கூல் நிர்வாக அறங்காவலர் டாக்டர் கிறிஸ்டோபர் பால் மற்றும் முதல்வர் ஏஞ்சலின் கிறிஸ்டோபர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்..