கோவை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 பிறந்தநாளையொட்டி கோவையில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.அதேபோல பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் திமுக தொண்டர்கள் வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்டம் கணபதி பகுதி திமுக மற்றும் கணபதி பகுதி திமுக இளைஞரணி ஆகியோர் இணைந்து கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திமுக கணபதி பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் பூபாலன் தலைமையில் கணபதி,பகுதி செயலாளர் கோவை லோகு முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 47வது வட்டச் செயலாளர் செல்வமணி வரவேற்புரை ஆற்றினார்.

இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலைஞரின் பிறந்த நாளை குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, கோவை மாநகர மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் துரை பிரவீன் குமார், கணபதி பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் பாபு கணேஷ்,மற்றும் ஐடி இன்போ சிஸ்டம்ஸ் ஷெரின், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *