துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் பேருந்து நிலையம் முன்புறம் உள்ள கலைஞர் சிலை முன்புறம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 102 வது பிறந்த நாளைமுன்னிட்டு நகர்மன்றம் சார்பில் நகர்மன்றத்தலைவர் செல்வராணி மலர்மன்னன், நகர் மன்ற துணைத்தலைவர் மெடிக்கல் முரளி ஆகியோர் மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் வீர மணிகண்டன், அம்மன்பாபு, இளையராஜா, சுமதி மதியழகன்,நித்யா கிருஷ்ணமூர்த்தி, ஜானகிராமன்,சுதாகர், கார்த்திகேயன்,
முத்து மாங்கனி, பாஸ்கரன் , செந்தில்குமார், ஹேமா உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள்,தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, ஸ்டாலின்குமார் எம்எல்ஏ, முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சிவ சரவணன், பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சுரேஷ்குமார்,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் செங்கை செல்லமுத்து, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கிருபா, நகர துணை செயலாளர் இளங்கோவன், பிரபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *