திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தாராபுரம் நகரம் மற்றும் தாராபுரம் ஒன்றியம், மூலனூர் கிழக்கு-மேற்கு ஒன்றியம், குண்டடம் கிழக்கு-மேற்கு ஒன்றியம் ஆகிய நகர ஒன்றிய பகுதிகளில் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிலையில் தாராபுரம் நகர திமுக கழகம் சார்பில் காமராஜர் புறம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் திருஉருவப்படத்திற்கு தொண்டர்களும் பொதுமக்களும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு பேரணியாக திமுக கருப்பு சிவப்பு கழகக் கொடியை கையில் ஏந்தியவாறு அரசமரம், சின்ன கடைவீதி, டி எஸ் கார்னர், பெரியகடைவீதி, பூக்கடைக்காரர். சர்ச் சாலை வழியாக அண்ணா சிலை பகுதியை ஊர்வலம் வந்தடைந்தது. அங்கு பழைய நகராட்சி அலுவலக எதிரே அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி அவர்களின் திரு,உருவப் படத்திற்கு தாராபுரம் நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு அண்ணா சிலைக்கு பின்புறத்தில் உள்ள 40, அடி திமுக கொடி கம்பத்தில் கழக கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியின் போது:
தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.எஸ். தனசேகர். புதிய ஒன்றிய செயலாளர் கே.கே.மீசை துரைசாமி. நகரத் துணைச் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட நகர,ஒன்றிய, பேரூர் கழக வார்டு கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.