கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளாக ஓவிய ஆசிரியராக பணி புரிந்து வந்த ஆசிரியர் ரவி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் க.பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் அனைத்து ஆசிரியர்களும்ஓவிய ஆசிரியர் ரவி அவர்களை பாராட்டி சிறப்புரை ஆற்றினர் இதைத் தொடர்ந்து தனது பனிக்காலத்தில் ஏற்பட்ட இடையூறுகளையும் நன்மைகளையும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது கருத்துக்களை பதிவு செய்து பணி நிறைவு செய்தார்
இந்த நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள் நடராஜ், சரவணன், கார்த்திக், அருண்குமார்,மோகன், செந்தில், ஸ்ரீதர், சண்முகம், ஜெயப்பிரகாஷ், சங்கரி, மனோன்மணி, மகேஸ்வரி, உடற்கல்வி ஆசிரியர் பத்மா உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் மற்றும் தற்காலிக ஆசிரியர்களும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் அவருக்கு பாராட்டுகள் செய்து வழி அனுப்பி வைத்தனர்