தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், பாப்பாரப்பட்டி தமிழக வெற்றி கழக பேரூராட்சி சார்பில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா பாப்பாரப்பட்டி பேரூராட்சி நகர செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் கள் தாபா. சிவா, விஜயகாந்த், டாக்டர் ஜானி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்தும், சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கினார்.இந்த விழாவில் பென்னாகரம் ஒன்றிய செயலாளர் ரஞ்சித், மாவட்ட மகளிர் அணி தலைவி சத்யா, விவசாய அணி மணி, சுற்றுச்சூழல் அணி செந்தில்குமார், தொண்டர் அணி சுரேஷ், தகவல் தொழில் நுட்ப அணி தினேஷ், விமல், தருமபுரி நகர செயலாளர் சிட்டி சுரேஷ், மாணவரணி அதியமான், பாப்பாரப்பட்டி பேரூராட்சி நகர பொருளாளர் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் தனுஷ் குமார், ரவி, பொன்ராஜ், சக்திவேல், சந்தோஷ் மற்றும் மாவட்ட, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *