தஞ்சை மாவட்டம் சருக்கை முத்து முனியாண்டவர் கோவில் திருவிழா-பக்தர்கள் பால்குடம், காவடி , முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சருக்கை ஊராட்சி காமராஜ் தெருவில் எழுந்தருளியுள்ள சர்வ சக்தி விநாயகர் மகா காளியம்மன் , பச்சை காளியம்மன் ,முத்து முனியாண்டவர் ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அது சமயம் சருக்கை காமராஜர் தெரு காவிரி ஆற்றங்கரையிலிருந்து அக்னி கொப்பரை ,சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி முளைப்பாரி எடுத்து வாண வேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக மேளத்தளங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தது.


அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது விழாவில் சருக்கை காமராஜர் தெரு கிராம நாட்டாமைகள் கிராமவாசிகள் நற்பணி மன்றத்தினர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *