நாமக்கல்.

மாங்காய் அதிக விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை

மாங்காய் அதிக விளைச்சல் இருந்தும் கட்டுபடியான விலை இல்லாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்வர் தலையிட்டு மாங்கூள் ஆலைகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வேலுசாமி கோரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்


‌‌ கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் அதிக அளவில் மா சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பருவமழை உரிய நேரத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மழை பொழிவின் காரணமாக இந்த ஆண்டு மாமரத்தில் மாங்காய் நல்ல விளைச்சல் உள்ளது.தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 60க்கு மேற்பட்ட மாங்கூழ் தயாரிக்கும் தனியார் ஆலைகள் உள்ளது.

இந்த ஆலைகள் ஆண்டுதோறும் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து மாங்காய் வரத்து துவங்கப்பட்ட நாள் முதல் மா விவசாயிகளிடம் இருந்து மாங்காய் கொள்முதல் செய்து மாங்கூழ் தயாரிக்கும் ஆலைகள் இயங்கும். ஆனால் இந்த ஆண்டு மாங்காய் நல்ல விளைச்சல் இருந்தும் மாங்கூழ் தயாரிக்கும் தனியார் ஆலைகள் இன்று வரை இயங்கவில்லை.

 இந்த ஆண்டு நல்ல விளைச்சல் உள்ள மாங்காய் அறுவடை துவங்கப்பட்டு இதுவரை மாங்கூல் தயாரிக்கும் ஆலைகள் இயங்காததால் நல்ல விளைச்சல் உள்ள செந்தூரா, பங்கனவள்ளி மாங்காய் ஒரு டன் ரூ.5,000 க்கு ‌வெளிச்சந்தையில் மிக மலிவான விலையில் மா சாகுபடி செய்யும் விவசாயிகள் மாங்காய் விற்பனை செய்யவேண்டியுள்ளது. மா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்தும் மாங்கூல் தயாரிக்கும் ஆலைகள் திறக்காததால் பலத்த நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

  மா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை இல்லாததால் விவசாயிகள் மரத்தில் இருந்து மாங்காய் அறுவடை செய்யமுடியாமல் மாங்காய் மரத்தில் இருந்து பழுத்து கீழே கொட்டுகிறது.கடந்த ஆண்டு நல்ல விளைச்சல் உள்ள மாங்காய் ஒரு டன் ரூ.22,000 ம் வரை நல்ல விலை மா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கிடைத்தது.

    இந்த ஆண்டு மாங்கூல் தயாரிக்கும் தனியார் ஆலைகள் இதுவரை இயங்காததால் இந்த ஆண்டு மா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை இல்லாததால் மா விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கிறது. மா சாகுபடி செய்யும் விவசாயிகள் நலன் கருதி  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாங்கூழ் தயாரிக்கும் தனியார் ஆலை முதலாலளிகள் மற்றும் மா சாகுபடி செய்யும் விவசாயிகளை அழைத்து அந்த அந்த மாவட்டத்தில் உள்ள ஆட்சியர்கள் தலைமையில் உடனடியாக ஆலோசனை கூட்டம் நடத்தி மாங்கூழ் தயாரிக்கும் தனியார் ஆலைகளை உடனடியாக திறக்க  தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் மூலம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *