ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பெருமாள் தேவன் பட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சுயம்பு தர்ம முனீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பொது அன்னதானம் மற்றும் இந்தக் கோவிலின் வருடாந்திர வைகாசி திருவிழாவை முன்னிட்டு, காலை கோவில் முன்பு பக்தர்கள் வேண்டுதலாக கொடுத்த 121 ஆட்டுக்கிடாய்கள் பலியிடப்பட்டு 2000 கிலோ கறி 10 அண்டாக்களில் சமைக்கப்பட்டு, 13 மூட்டை (100 கிலோ) 1300 கிலோ அரிசி, 9 சமையல் கலைஞர்களால் சமைக்கப்பட்டு தர்ம முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடத்தி பொது மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

காலை 9 மணி முதல் மாலை 6 வரை நடைபெறும் அன்னதானத்தில் கமுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுயம்பு தர்ம முனிஸ்வரரை தரிசித்து அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று முன்தினம் கோவில் முன்பு அமைக்கப்பட்ட தோரண வாயில் மற்றும் இரண்டு குதிரை சிலைகளுக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர்
500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர். பின்னர் ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி மற்றும் வேல் குத்துதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *