புதுச்சேரி பாஜக சார்பில் நடைபெற்ற தேச ஒற்றுமை பேரணியில், கேரள பாரம்பரிய நடனமான தைய்யம் நடன கலைஞர்களுடன், ஈரோடு முரசு கொட்டி தப்பாட்டத்துடன் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது
பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு, ஆப்ரேஷன் செந்தூர் மூலம் பதிலடி கொடுத்து தீவிராதிகளின் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் தேச ஒற்றுமயை வலியுறுத்தும் விதமாக ஆப்ரேஷன் செந்தூர் வெற்றி ஊர்வலம் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சார்பில் நடைபெற்றது.
தொகுதியின் பாஜக பொறுப்பாளரான பிரபுதாஸ் தலைமையில் புறப்பட்ட பேரணியை பாஜக தலைவர் செல்வ கணபதி தொடங்கி வைத்தார் பேரணியில் ஈரோடு புகழ்பெற்ற முரசு கொட்டி கேரளா பாரம்பரிய நடனமான தைய்யம் நடன கலைஞர்களுடன் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்துடன் பேரணியாக சென்றனர் . இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி பிருந்தாவனம் பெரியார் சிலை அருகே முடிவடைந்தது.
மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற தேச ஒற்றுமை பேரணியில் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்துடன் தேசிய கொடியை கையில் பிடித்தபடி சென்றனர்.பேரணியில் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் என அனைவரும் திரளாக பங்கேற்றனர்.