பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு கட்டுமான பணி அரசு அனுமதியுடன் பூரணாங்குப்பம் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் , தற்போது காயத்திரி சாரிட்டீஸ், ExNoRa international Fountation, NDSO- ஆகிய NGO – க்கள் பங்களிப்புடன் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி கட்டி வருகிறது.
1 கோடி மதிப்பீட்டில் செய்யப்படும் பணிக்கு மேலும் சில கம்பனிகளின் CSR – Fund-ம் கோரப்பட்டுள்ளது இப்பணியினை பார்வையிட்ட மணவெளி தொகுதி முன்னாள் MLA புருஷோத்தம்மன் அவர்கள் மகனார் பு.குமுதன் அவர்கள் (அ.திமுக மாநில துணைச் செயலாளர்) பார்வையிட்டு தனது பங்களிப்பாக 100 – மூட்டை சிமென்ட்டை முழியன்குளம் சீரமைப்பு பணி குழுவிடம் அன்பளிப்பாக வழங்கினார் நிகழ்வில் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.