பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.
தஞ்சை மாவட்டம்
பாபநாசம் அருகே ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலய பால் குட திருவிழா 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நெடுஞ்சேரியில் எழுந்தருளிள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலய பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு திருக்கருக்காவூர் வெண்ணாட்டங்கரையில்
இருந்து பக்தர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பால்குடம் ,காவடி எடுத்து மேல தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மதுர காளியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் சிலம்பாட்டம், ஆட்டம் பாட்டத்துடன் பால்குட வீதிஉலா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவின் ஏற்பாடுகளை நெடுஞ்சேரி கிராமவாசிகள் நாட்டாமைகள் செய்திருந்தனர்.