கோவைபுதூர் ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா
நடிகர் தாமு மற்றும் நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் ஆகியோர் பங்கேற்று ஐம்பதாயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கி வைப்பு
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையை ஒட்டிய கோவைபுதூர் பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது ஐம்பாதயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான திட்டத்தை துவங்கும் வகையில் நடைபெற்ற இதில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் மற்றும் பிரபல நடிகர் தாமு ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு புதிய திட்டத்தை துவக்கி வைத்தனர்..
தொடர்ந்து நடிகர் தாமுவுடன் இணைந்து ஒவ்வொருவரும் ஐந்து மரக்கன்றுகள் நடுவோம் என உறுதி மொழி எடுத்து கொண்டனர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தாமு மறைந்த நடிகர் விவேக் சுமார் முப்பந்தைந்து இலட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளதாகவும்,இதில் சுமார் ஏழரை இலட்சம் மரக்கன்றுகள் மரமாக வளர்ந்திருக்கும் என அவர். நம்பிக்கை தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், ,மரங்கள் வளர்வதற்கு தடையாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை கையாள்வதில் பொதுமக்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்றார்..
இதனை தொடர்ந்து பேசிய ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் விற்பனை தலைவர் பிதா குமார்,செவன் ஹில்ஸ் பகுதியில் 700 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வகையான பிளாட்டுகள் விற்பனைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் வளாகத்தில் நடைபெற உள்ள மேஸ்ட்ரோ இளையராஜா இசை நிகழ்ச்சி குறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில்,இது போன்ற மலைகள் சூழ்ந்த இயற்கை சார்ந்த இடத்தில் உலகலேயே முதன் முறையாக இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற போவதாக தெரிவித்தார்…