நெகிழி இல்லா உலகம் கேட்டேன் பசுமை நிறைந்த பூமி கேட்டேன் – கவிதை கூறி அசத்திய மாணவி ஓவியங்கள்,கவிதை, கட்டுரை வாயிலாக உலக சுற்று சூழல் தினத்தன்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கட்டுரை,கவிதை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .

.ஆசிரியர்கள் ஸ்ரீதர் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார். மாணவர்கள் பள்ளி வளாகத்தில் செடிகளை நட்டனர். மாணவர்களும்,ஆசிரியர்களும் பசுமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *