தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் கலைஞர் பிறந்தநாள் விழா
தூத்துக்குடி மாநகராட்சி போல்பேட்டை பகுதி 20வது வார்டு செல்வநாயகபுரம் மெயின் ரோட்டில் கலைஞர் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அலங்கரிங்கபட்ட படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு வட்ட செயலாளர் இரவீந்திரன் தலைமை வகித்தார்.
மாவட்ட பிரதிநிதி நாராயணன் கொடியினை ஏற்றி வைத்தார். பள்ளி மாணவ மாணவியர்க்கு இனிப்பு வழங்கபட்டது.நிகழ்ச்சியில் பிரதிநிதிகள் அருணகிரி ராஜா செந்தில் வேல், நிர்வாகிகள் அற்புதராஜ் பெரியசாமி ஸ்ரீதரன் பாலசுப்பிரமணியன் சரவணன் சிவசுந்தர் பாக்கியதுரை ராஜ்குமார் வசந்தகுமார் முத்தமிழ் செல்வன் சண்முகசுந்தரம் சிவகுருசாமி ஜெயபாண்டியன் செல்வலிங்கம் காளிமுத்து பாஸ்கரன் சண்முகம் இசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.