பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சை மாவட்டம் பசுபதிகோவிலில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பசுபதிகோவிலில் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ராமபிரபு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிர்வாகிகளுக்கு கழக வேட்டி வழங்கி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இதில் ஒன்றிய அவைத் தலைவர் இலசுமணி, ஒன்றிய கவுன்சிலர்
பாபிசுதாகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் அருண்,கிளை செயலாளர் செழியன் மற்றும் தெற்கு ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.