திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள பேரூர் திமுக அலுவலகத்தில் ஒன்றிய, பேரூர் திமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ. அன்பரசன் தலைமை வகித்தார், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி, பேரூர் செயலாளர் பா. சிவநேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அலங்கரிக்கப்பட்ட கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வலங்கைமான் பேரூராட்சி 12-வது வார்டு புங்கஞ்சேரி பகுதியில் மாவட்ட கழகம் வழங்கிய 60 அடி உயர கொடி மரத்தில் கழக கொடியை மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், பேரூர் திமுக அவைத் தலைவர் சோம. மாணிக்கவாசகம், பொருளாளர் புருஷோத்தமன், துணைச் செயலாளர்கள் வி.சி. ராஜேந்திரன், பா.வசந்தி, லாயம் வி.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி எஸ். ரவிச்சந்திரன், முனைவர் செல்வ. மேகநாதன், பேரூர் நிர்வாகிகள் வி.சதானந்தம், சி.எம். கதிரவன், கே. செல்வமணி, க.செல்வம், சிங்குதெரு எஸ்.ஆர்.ராஜேஷ், ரம்ஜான் பீவி சிவராஜ், யூ.ஆனந்த்குமார், கே.வீரமணி, சுமதி தர்மராஜ், எம். செல்வமணி, புகழ்.மதுசோழன், ஆர்.கணேசன், எஸ்.ஜி.எஸ். கணேஷ், எஸ்.நிரஞ்சன், கே.சரவணன், கோ.சண்முகசுந்தரம் யாதவ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்வமணி, ராணி சோம மாணிக்கவாசகம், க.செல்வம், பானுமதி வி.சி.ஆர், ரம்ஜான் பீவி சிவராஜ், வீரமணி, நூர்ஜஹான் ஜெகபர் அலி, யூ.ஆனந்த்குமார், வசந்தி பாஸ்கர், சுமதி தர்மராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கட்சியினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.