தென்காசி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சீசன் தொடங்கியதை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் குற்றாலம் அருவிகளில் குளித்து செல்வது வழக்கம் இந்நிலையில் இந்த வருடத்திற்கான சீசன் மே மாதத்திலேயே தொடங்கியதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சுற்றுலா பயணிகளுக்கு அதிகப்படியான பேருந்துகளை இயக்க தமிழக முதல்வரின் ஆணையின்படி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா சிவசங்கர் உத்தரவின் பேரில் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் க.தசரதன் விடுத்துள்ள அறிவிப்பின்படி இன்றைய தினம் முதல் தினமும் 5 புதிய ரக பி எஸ் 6 பேருந்துகள் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி மெயின் அருவி பழைய குற்றாலம் ஐந்தருவி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன இந்த பேருந்துகள் அனைத்தும் மகளிர் விடியல் பயண பேருந்துகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது

தென்காசி மாவட்டத்திற்கு குற்றாலத்திற்கு குளிக்க வரும் பெண்களின் வசதிக்காக இந்த பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக மேலாண் இயக்குனர் தசரதன் தெரிவித்தார்.மேலும் தினமும் தென்காசி ரயில் நிலையத்திலிருந்து காலை முதல் மாலை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன

என்பதையும் இதை பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.குற்றாலத்திற்கு வரும் பயணிகள் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிப்பது பெண் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மக்களின் தேவைகளை உணர்ந்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இன்னும் அதிக பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் பொதுமக்களிடத்திலிருந்து கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பாதுகாப்பான பயணத்தை பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டுமென்று தமிழக அரசு போக்குவரத்துக் கழக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *