நெமிலி மத்திய ஒன்றியம் எஸ்ஜிசி பெருமாள் தலைமையில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாட்டம் :-

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு சயனபுரத்தில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 500 பேருக்கு அன்னதானத்தை மாவட்ட கவுன்சிலர் வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்ட ம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சயனபுரத்தில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் SGC, பெருமாள் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் நரசிம்மன்,மாவட்ட கவுன்சிலர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

துணை செயலாளர்கள் சீனிவாசன், ஜானகிராமன், சுந்தர வடிவேல் முன்னிலை வகித்தனர். பொருளாளர் SRB, ரமேஷ் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள் கலந்து கொண்டார். சயனபுரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் திரு உருவ படத்துக்கு ஒன்றிய செயலாளர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள் சயனபுரம் மற்றும் பரமேஸ்வர மங்கலம் பள்ளிகளை சேர்ந்த 100 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் புத்தகப்பை வழங்கினார். பின்னர் 500 பேருக்கு அன்னதானம் இனிப்பு வழங்கி பேசினார். விழாவில் மாவட்ட பிரதிநிதிகள் சேட்டு, இளைஞரணி நிர்வாகிகள் எல்லப்பன், முகேஷ் முரளி, தனஞ்செழியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *