வலங்கைமான் அருகே உள்ள அரித்து வார மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ட்பட்ட களத்தூர் கிராமத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட களத்தூர் கிராமத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நடைபெற்றது.
அரித்து வார மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதார மேற்பார்வையாளர் கோபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு புகைபிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப் பட்டது.
மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் முககவசம் அணிந்து செல்லவும். காய்ச்சிய குடிநீரை பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.