அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கல்லனை ரவிச்சந்திரன், தலைமை தாங்கினார் நகர செயலாளர் குமார் முன்னிலை வாசித்தார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார், கலந்து கொண்டு ஒரு வார்டுக்கு 40 வயது உட்பட்ட 9 பேரை பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்து 2026 இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றி தங்களது பகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி,66மேட்டுப்பட்டி,சத்திரவெள்ளாளப்பட்டி வலையபட்டி, உள்ளிட்ட கிராமங்களில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை கழகப் பொறுப்பாளர் தண்டரை மனோகரன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வாடிப்பட்டி ராஜேஷகண்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம், எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், ஜெயச்சந்திரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மனோகரன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர்கள் மருதாயி, சாந்தி, மகாலட்சுமி, கிளைச் செயலாளர் பாண்டுரங்கன், விவசாய அணி ஆர்.பி. குமார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திருநாவுக்கரசு, வழக்கறிஞர் காசிமாயன், உள்பட பலர் கலந்து கொண்டனர்..