திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று மாணவர்கள் சேர்க்கை, விலையில்லா பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்டவை வழங்கல், ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும் விழாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் டி.ஆர்.நம்பெருமாள் தலைமை தாங்கினார். கல்வியாளர் பொன்.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் சுப.தமிழ் நேசன் வரவேற்றார்.


சிறப்பு அழைப்பாளராக, வட்டார கல்வி அலுவலர் திரு.பச்சையப்பன் பங்கேற்று மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். இந்த கல்வி ஆண்டில்‌ மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் படித்து சிறந்த மாணவர்களாக திகழ வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச் செல்வி நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *