புதுவையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பங்கேற்ற பிரம்மாண்ட “ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் தேசியக்கொடி பேரணி” பிரம்மாண்டமாக நடந்தது. இதில் பல ஆயிரம் கணக்கான பொதுமக்கள் பங்கேற்று 3 கிலோமீட்டர் தூரம் வரை தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து மோடி தலைமையிலான மத்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது.

பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய தாக்குதலை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பங்கேற்ற பிரம்மாண்ட “ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் தேசியக்கொடி பேரணி” பிரம்மாண்டமாக நடந்தது.

நெல்லிதோப்பு தொகுதி ஜான்ரிச்சர்டு எம் எல் ஏ அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அவரது தாயார், எம்எல்ஏக்கள் ஜான் குமார், ரிச்சர்டு ஜான்குமார், கல்யாணசுந்தரம் சிவசங்கரன் எம் எல் ஏ, அங்காளன் எம் எல் ஏ, மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பேரணியின் முன்னதாக தேசபக்தி பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு நாட்டுப்புற கலைகளான தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தற்காப்பு கலை நிகழ்ச்சிகள் என கண்கவரும் கலை நிகழ்ச்சிகளை நாட்டுப்புறக் கலைஞர்கள் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சுமார் 5 ஆயிரம் பொதுமக்கள் தேசியக் கொடியை ஏந்திய படி நாட்டுப்பற்றை உணர்த்தும் வகையில் கோஷங்கள் எழுப்பி பங்கேற்றனர். இந்தப் பேரணியில் இளைஞர்கள் மாணவர்கள் மகளிர் ஆகியோர் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
இந்த ஊர்வலம் காமராஜ் நகர் தொகுதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து எம்எல்ஏ அலுவலகத்தில் நாள் தோறும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அறுசுவை உணவு உண்ணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட அறுசுவை உணவு திட்டத்தின் முழு நன்கொடையாளரான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அவரது தாயார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்தத் திட்டத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உணவு சாப்பிட்டு பயனடைவார்கள்.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சமூக சேவையாளர் ரீகன் ஜான்குமார், பாஜக மாநில மாவட்ட, நெல்லித்தோப்பு மற்றும் காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய அறுசுவை பிரியாணி உணவு வழங்கப்பட்டது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *