முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு.
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு சார்பில் கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடி க்காகவும் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தண்ணீர் திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது தமிழக அரசின் ஆணைக்கிணங்க முதல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கு வினாடிக்கு 200 கன அடி வீதமும் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 100 கன அடி வீதமும் என்று மொத்தம் 300 கன அடி நீர் வீதம் 120 நாட்களுக்கு அணையின் நீர் இருப்பு அணைக்கு நீர்வரத்து பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது
இந்த தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு பகுதிகளில் 14707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவே தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாய பெருங்குடி மக்கள் திறந்து விடப்பட்டுள்ள இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன் பெற வேண்டும் என்றார்
இந்த நிகழ்ச்சியில் உத்தம பாளையம் வருவாய் கோட்டாட்சியர் சைய்யது முகமது செயற்பொறியாளர் செல்வம் வட்டாட்சியர் கண்ணன் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.