பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.
பாபநாசம் அருகே உள்ளிக்கடை மகா மாரியம்மன் ஆலய பால்குட அபிஷேக ஆராதனை விழா-திரளான பக்தர்கள் முளைப்பாரி ,பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா உள்ளிக்கடை மகா மாரியம்மன் ஆலய பால்குட அபிஷேக ஆராதனை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அது சமயம் காவிரி கரையில் அமைந்துள்ள காசி விசுவநாதர் ஆலயத்தில் இருந்து சக்தி கரகம், பால்குடம் ,அலகு காவடி, முளைப்பாரி தப்பாட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து கோவிலுக்கு சென்றடைந்தது.
அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் உள்ளிக்கடை கிராமவாசிகள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் வழிப்பட்டனர்.