தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் வெற்றியடைந்ததை தொடர்ந்து,பயங்கரவாதத்திற்கு எதிராக துல்லிய தாக்குதல் நடத்தி தக்க பதிலடி கொடுத்த முப்படை வீரர்களுக்கும், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் வினோத் குமார், மாவட்ட துணை தலைவர் மோகன்தாஸ், பெரியகுளம் நகர் தலைவர் திவ்யா, முன்னாள் மண்டல தலைவர் தவராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் சிவகுமார் வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆபரேஷன் சிந்தூர் குறித்து சிறப்புரையாற்றினார்.


கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.சண்முகசுந்தரம், பார்வேர்டு பிளாக் நிர்வாகி ஜி.பி. துரை முன்னாள் மாவட்ட தலைவர் பி சி பாண்டியன்,முன்னாள் நகர தலைவர் முத்துப்பாண்டி,தேனி பாராளுமன்ற தொகுதி முழு நேர ஊழியர் முருகன்,மாவட்ட செயற்குழு கோபி கண்ணன்,நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் முனியாண்டி,கிழக்கு ஒன்றிய தலைவர் முத்தையா, மாநில, மாவட்ட, நகர், ஒன்றிய, பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *