விண்ணேற்பு ஆண்டவர் தேவாலயா தேர்பவனி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள திருச்சிலுவைபுரம் கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் விவசாயத்தை மட்டும்
நம்பியுள்ளனர்.

இக் கிராமத்தில் சுமார் 90 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட விண்ணேற்பு ஆண்டவர் தேவாலயம் ஒன்று உள்ளது. இங்கு வருடா வருடம் தேர் திருவிழா நடைபெறுகிறது.

கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது தினமும் திருவிழா திருப்பலி நடைபெற்றது பின்னர் நேற்று இரவு திருவிழா திருப்பலி
மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று இரவு முழுவதும் தேர் பவனி வான வேடிக்கை யுடன், மேளதாளம் முழங்க நடைபெற்றது.

இதில் 1000 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். விழாவில் மலர்களால் அலங்கரிக் கப்பட்ட,மின்னொழியுடன் மிக்கேல் ஆண்டவர் தேர்
முன்னதாக செல்ல, அதன் பின்னே ஜெபஸ்தியர் தேர், வியாகுல அன்னை மற்றும் விண்ணேற்பு ஆண்டவர் தேர் செல்கிறது.

வான வேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக இந்த தேர் பவனி நடைபெற்றது.அப்போது பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு முன்பு தேர் வரும் போது, தங்கள் விவசாய நிலத்தில் விளைந்த புது நெல் மற்றும் நெல் படையலிட்டு மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தேர் செல்லும் போது அதற்குப் பின்புறம் குழந்தை வரம் வேண்டியும், திருமணம் தடை நீங்கவும் ,மேலும் பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இரவு முழுவதும் மண்டியிட்டு வணங்கி சென்றனர் பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட சப்பரத்தில் விண்ணேற்பு ஆண்டவர் மலர் அலங்காரத்துடன் காட்சியளித்தார் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருச்சிலுவைபுரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *