புதுவையின் உதயம் அறக்கட்டளையின் நிறுவனர் தண்டபாணி பிறந்தநாள்
விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுவையின் உதயம் அறக்கட்டளையின் நிறுவனர் தண்டபாணி பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள சாய்பாபா ஆலயத்தில் பக்தர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

தொடர்ந்து நிலா முதியோர் காப்பகத்தில் அனைத்து முதியோர்களுக்கும் இனிப்புகளுடன் புடவை மற்றும் துண்டு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொன்னியம்மன் கோவில் அருகில் உள்ள சக்தி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தொடர்ந்து மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகளாக புடவை மற்றும் துண்டு வழங்கப்பட்டது. இதில் பிவெல் மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவமனை, பிரைம் பல் மருத்துவமனை ஆகிய மருத்துவமனை மூலமாக சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கண் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் பார்க்கப்பட்டது. மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களை பரிசோதித்துக் கொண்டு பயனடைந்தனர்.

தொடர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள பொது மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழிலதிபர் தண்டபாணி அவர்களை அவர்களது நிறுவனத்தைச் சார்ந்த ஊழியர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து பிறந்தநாள் விழாவில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் என திரளானோர் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை புதுவையின் உதயம் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பாலமுருகன், ராஜசேகர், சிவபாலன், வெங்கடேசன், சதீஷ், கந்தன் ஆகியோர் இணைந்து வெகு சிறப்பான முறையில் செய்து இருந்தனர்.

Share this to your Friends