பாபநாசம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சிறப்பு பொது மருத்துவ முகாம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஓ.எஸ்.ஜே ஆபிதீன் அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்தும் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் ஓ.எஸ்.ஜ ஹாஜாமொகைதீன் தலைமை வகித்து சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் இம்முகாமில் மருத்துவர்கள் கார்த்திகேயன், அக்ஷயா , ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
முகாமில் ரத்த பரிசோதனை சர்க்கரை அளவு இசிஜி ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றது இதில் 150 பயனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
முகாமில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் சாப்ஜான் , பள்ளி நிர்வாக ஆலோசகர் கிருத்திகா, மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயபிரகாஷ் , பள்ளி முதல்வர் தாஹிரா , பள்ளி துணை முதல்வர் இந்திரா மற்றும் ஆசிரியர்கள் ,பெற்றோர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது இதில் பள்ளியின் வளர்ச்சி குறித்தும் மாணவர்களின் தேர்ச்சி குறித்தும் ஆலோசனை நடைப்பெற்றது ..