கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று அசத்தல்
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த பொது தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட அதிகமாக நடப்பாண்டில் 96.47 விழுக்காடு மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள வி.சி. சுப்பையா மீனாட்சியம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நடந்து முடிந்த 2024-2025 கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத வெற்றி பெற்று கவனத்தை ஈர்த்துள்ளனர்..
இதனை தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் 100 சதவீத மதிப்பெண்கள் எடுத்த மாணவ,மாணவிகளுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பள்ளியின் தாளாளர் ஹெரால்டு ஷாம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.