தாராபுரம், விவேகம் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மாபெரும் சாதனை

தாராபுரம் விவேகம் பள்ளியில் மாநில அளவில் மாபெரும் சாதனை பெற்றுள்ளார்கள். சாதனைகளில் மேலும் ஒரு மைல்கல்லாக பள்ளி அளவில் 598 /600 மதிப்பெண்கள் பெற்று கே. கிருஷ்ணபிரியன் நான்கு பாடங்களிலும் 100/100 மதிப்பெண்கள் பெற்றுப் பொறியியல் கட் ஆப் 200 / 200 க்கு எடுத்து முதலிடமும் 597/ 600 மதிப்பெண்கள் பெற்று ஆர். ரஞ்சித் இரண்டாமிடமும் 592/ 600 மதிப்பெண்கள் பெற்று கே. தான்யஸ்ரீ மூன்றாமிடமும் பள்ளியில் 72 சதங்கள் எடுத்தும் மாணவர்கள் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

விவேகம் பள்ளியில் இக்கல்வியாண்டிலும் மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுச் சாதனைப் புரிந்துள்ளனர். இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விவேகம் பள்ளியின் தாளாளர் முனைவர் ஆர். சுப்பிரமணியன் செயலாளர் முனைவர் கே. பூபதி மற்றும் பள்ளியின் நிர்வாகிகள் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கிச் சிறப்பித்தனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *