செங்குன்றம் செய்தியாளர்
போக்குவரத்து காவலர்கள் கோடை காலங்களில் வெயிலை சமாளிக்கவும் கண்களை பாதுகாக்கவும் சன் கிளாஸ் வழங்கிட சென்னை மாநகர காவல் ஆணையாளர் அருள் உத்தரவின் பேரில் போக்குவரத்து துணை ஆணையாளர் விஸ்வேஸ் பி சாஸ்திரி தலைமையில் மாதவரம் செம்பியம் வியாசர்பாடி கொடுங்கையூர் ஆகிய காவல் நிலையத்திற்குட்பட்ட எல்லைகளில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்கள் 150 பேருக்கு போக்குவரத்து உதவி ஆணையாளர் சத்தியமூர்த்தி சன் கிளாஸ் வழங்கினார்.